ஏ.ஆர்.ரஹ்மான்... ம்.. இன்று எல்லோரும் முணுமுணுக்கும் பெயர். ரஹ்மானின் இரசிகன் நான்... றோஜாவிலிருந்தே இரசிகன்... ஒஸ்கார் கிடைத்தது பெரிய விசயம்தான்... ஆனால், ஒஸ்காரால் அவருக்குப் பெருமையல்ல... ரஹ்மானிடம் எனக்குப் பிடித்தது... இசையைத் தவிர... அவரது பணிவு... பெருந்தன்மை... மனிதாபிமானம்.. சுனாமி அடித்தபோது... தமிழகத்தின் ஒரு கிராமத்தின் கடற்கரையில் ரஹ்மான், சிவமணி, ஹரிகரன் எனத் தன் குழுவினருடன் போய் ஒரு இசைக் கச்சேரி செய்தாராம்... சுமார் இரண்டரை மணிநேரம் செய்தாராம்... இதைவிட மனிதாபிமானத்திற்கு அத்தாட்சி என்ன வேண்டும்... அவர் நடத்திய கச்சேரிகளை விரல்விட்டு எண்ணலாம்... சென்னையில் ஒரேயொரு முறைதான் நடத்தியிருக்கிறார்... வாழ்க ரஹ்மான்...