Skip to main content

Posts

Showing posts from March, 2012

அருட்டல் 01

o இஞ்சேருங்கோ தம்பியைத் தெரிதே? o ம்.... ம்.... o என்னண்ணை என்ன மட்டுப்பிடிக்கேலாமைக் கிடக்கே? o நீர்..... o பிறக்கிறசியற்ர மோன்! o எடக்! சுதனே... o ஓம் அண்ண. o எப்ப தம்பி வந்தனீர்? அப்பா சுகமா இருக்கிறாரே? அம்மா எப்பிடியிருக்கிறா? o நான் ஒருமாத லீவில வந்தனான் மணியண்ண. அவைக்கென்ன, அக்காவோட சுகமா இருக்கினம். o எண, கொஞ்சம் தண்ணி தாவன். நா வறண்டு போச்சு. தம்பி, சரியான வெய்யில் என்ன? வீட்டுக்கையும் இருக்கேலாது, வெளியிலையும் போகேலாது. இப்பவே உப்பிடியெண்டா பங்குனி பிறக்க இன்னும் கொளுத்தப்போகுது. o அதுதான் அண்ணை அக்காவோடை இப்ப கதைச்சுக்கொண்டிருந்தனான். முந்தி உங்கட வீடு சரியான குளிர்மையாவெல்லே இருக்கும். முந்தி இது நாச்சார் வீடெல்லே? இதிலை ஒரு வேம்பும் நிண்டதென்ன? o ஓந்தம்பி. நாங்கள் இடம்பெயர்ந்து பிறகு திரும்பி வரக்கே வீட்டுச் சுவர் எல்லாம் வேம்பிண்ட வேராலை பிளந்து கிடந்தது. உனக்குத் தெரியுமே, வீட்டுக்க மாமரமும் முளச்சுக் கிடந்தது. அதினாலை சாந்தன் போனவருசம் வெளிநாட்டாலை வரேக்க எல்லாத்தையும் தறிச்சுப் போட்டு வீட்டையும் வடிவா திருத்தினவன். உள் முத்தத்தையும் அடச்சுப் போட்டான். o ஓ அப்பிடியே! மு...