Skip to main content

Posts

Showing posts with the label என்னையவை

புது வீடு...

வீடு புதுசில்லை... ஆனால் அந்த வீடு எனக்கு புதுசு.... முதன் முதலாக, இருப்பதற்கு ஒரு வீடு பார்த்துள்ளேன்! இரு அறைகள், ஒரு சிறு இருக்கையறை, சமயலறை என ஒரு சிறிய தொடர்மாடி வீடு... அந்த வீட்டில் இவை மட்டுமல்ல, ஏராளமான கனவுகளும் நிறைந்துள்ளன... முக்கியமாக சில விடயங்கள் எதிர்பராமல் அமைகின்றன... இன்று நான் வீடு சென்று பார்ப்பதற்கு முன் நாள் கோள் எதுவும் பார்க்கவில்லை. ஆனால் போன பின்தான் தெரிந்தது, இன்று 20ம் திகதி ஏகாதசி... எனக்கும் இவற்றுக்கும் வெகு தொடர்பு!

மீண்டும் வேதாளம்!

விடா முயற்சியுடன் மீண்டும் எழுதவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தொடங்குகிறேன்... பார்ப்போம்! நிறைய எழுதவேண்டும் என்று நினைப்பேன்... மனம் அடங்குவதில்லை... மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் தொடங்குகிறது!

மீண்டும்

எனக்கும் நிறைய எழுதவேண்டும் என்று ஆசைதான்... காலம் கைகொடுக்கவில்லை என்பதைவிட நான் காலத்திற்குக் கைகொடுக்கவில்லை என்பதே சரி. காலத்திற்கு கைகொடுத்து அதனை அனுசரிக்கவில்லை... சரி போகட்டும்... இனி.. இன்றிலிருந்து ஏதாவது ஏழுதவேண்டும்.. மீண்டும் ஒரு மூர்க்கத்தனமான முடிவு. பார்ப்போம்..