கடந்த ஞாயிற்றுக்கிழமை - 23.08.2009 முதல் ((என்று சொல்லப்படுகிறது)) இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தேன். நிகழ்வு இனிதே நிகழ்ந்தது... சிறப்பாக எழுதக்கூடியவர்கள், சிறந்த பேச்சாளர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது உண்மைதானோ? அதனால் எக்குறையுமில்லை, கலந்துரையாடல் இன்னும்கொஞ்சம் உத்தியோகபூர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தனைபேர் கலந்துகொள்வர் என அக்கூட்டத்திற்கு வந்த பலரைப்போல நானும் எதிர்பார்க்கவில்லை. பலர் பலவற்றைப் பேசினர், நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைச்சொல்லி விவாதத்தைத் தூண்டிவிட்டேன். அந்த விவாதம் சற்றுச் சூடுபிடித்துவிட்டது, அதனை இன்னும் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அந்நிகழ்வின் நோக்கம் அதில்லையென்பதால் பேசாமல் அமர்ந்துவிட்டேன். இது முதலாவது முயற்சி என்ற ரீதியில் பார்க்குமிடத்து நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சிலரைப் பற்றி மிகவும் பம்பல் அடிக்கப்பட்டிருந்தது, அதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். நபர்களை அறிமுகஞ்செய்யும் விதத்திலும் சில இடங்களில் சற்று அதிகமாகப் போய்விட்டது என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒழுங்கமைப்பாளா்கள் பணச்சுமையைச் சுமக்கக்கூடாது, ஆனால் அத...