சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன. நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த ...