Skip to main content

Posts

Showing posts with the label என்னவை

கன காலத்துக்குப் பிறகு...

கனகாலத்துக்குப் பிறகு இண்டைக்கு இதைத் திரும்ப எழுதத்தொடங்கவேண்டும் எண்டு நினைச்சன். இத மாதிரி எத்தனையோ வேலைகளைச் செய்யத்தொடங்கி அமையெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. என்ன செய்யயிறனெண்டு தெரிமாகக் கிடக்கு. சில நேரம், இதெல்லாம் செய்து என்ன நடக்கப்போகிது எண்டு நினைப்பன். சிலவேளை ஐயோ செய்யவேண்டும் என்று நினைத்து இப்படி ஒரு போஸ்டைப் போடுவன். பாப்பம் இனி என்ன நடக்கப்போகுதெண்டு...

தசாவதாரம் - ஒரு வித்தியாசமான பார்வை

தசாவதாரம் பற்றி நானும் எழுத முனைந்தேன்...அதனை முழுமையாக, முக்கியமாக விஞ்ஞானநோக்கில் பார்க்கமுனைந்துள்ளேன். அது இம்மாத ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. http://docs.google.com/View?docid=dpxnhgb_1g8v9qz73

விவாகரத்துக் கலாசாரம்

சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன. நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த ...

தசாவதாரம்- நானும் ஒரு விமர்சனம் எழுதினேன்

தசாவதாரம்... இண்டைக்குத் தேதிக்கு அதிகம் விமர்சிக்கப்படும் படம்... கமலின் அரசியலூடாகப் பலர் பார்க்கிறார்கள், பலர் அதை விஞ்ஞானமாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு மசாலா தமிழ்த் திரைப்படமாகவும் பார்க்கலாம். நான் ஒரு 4 பக்க விமர்சனம் எழுதினேன். அதில் முடிந்தளவு இந்த எல்லாக்கோணங்களிலும் பார்க்க முனைந்தாலும், விஞ்ஞானவே முன்னுக்கு வந்து விழுந்திருக்கிறது. அது இலங்கைளில் வெளிவரும் 'ஞானம்' சஞ்சிகையில் இம்முறை வரவிருக்கிறது. அதன் பின் நான் அதனை இங்கே தருகிறேன்.

புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல

நீங்கள் படிக்காத, ஏன் திறக்காத புத்தகங்கள் எப்போதாவது உங்களுக்கு அறிவைத் தந்திருக்கின்றனவா? அல்லது அவ்வாறு அவை தரமுடியுமா? ஆம் என்கிறேன், நான்! எனக்கு நான் திறக்காத புத்தகங்களும் அறிவைத் தந்திருக்கின்றன. கீழேயுள்ள புத்தக மேசையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும், அப்புத்தகங்கள் கூட எவ்வாறு அறிவைப் பெற உதவின என்று. J    

அடிமைப்படுங்கள்

என்னத்தைச் சொன்னாலும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒ்ன்றுக்கு அடிமையாகியே ஆகவேண்டும். அல்லது, வாழ்க்கையில் ஒரு சலிப்பு வந்துவிடும். ஒரு வெறுமை.... இந்த வெறுமை உணர்வை உணர்ந்துதான் பார்க்கவேண்டும், வார்த்தைகளில் வடிக்கமுடியாது... எனவே தயவுசெய்து எதற்காவது அடிமைப்படுங்கள்...

பலதும் பத்தும்

இதில் நான் நினைப்பவை, பார்ப்பவை, செய்பவை எல்லாம் அடங்கும்.... இதை எழுதலாம்... இதை இவர் எழுதியிருக்கக்கூடாது என்றெல்லாம் பார்க்காதீர்கள்... இதில் எல்லாம் இருக்கும்... நன்றிகளுடன் சர்வேஸ்