ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்
இவற்றுக்கென்ன சம்பந்தம்?
சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும்
அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும்.
சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே?
துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர். பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம்.
எமக்கு வலிமை மட்டும் இருந்தால் போததாது, வளங்களை அள்ளித் தருவது இரண்டாதாக நாம் வழிபடும் லச்சுமி. முக்கியமாக ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்ற அஷ்ட லச்சுமிகளும் பணம் மேலும் தைரியம் வெற்றிச் செல்வம் அறிவுச் செல்வம் என்று நமக்கு மிக முக்கியமாக ஸ்ராட்டப் செய்யத் தேவைப்படும் அனைந்து வளங்களையும் வழங்குகிறாள் லச்சுமி.
நிறைவாக சரஸ்வதி தேவி. எமக்கு வலிமை, வளம் இருந்தாலும் புத்தம் புதிய யோசனைகள் எண்ணங்கள் எண்ணங்களைச் செயற்படுத்துவதற்கான அறிவு என்று ஸ்ராட்டப்புக்குத் தேவையான மூன்றாவது முக்கியமான தேவைகளை நிறைவு செய்வாள் சரஸ்வதி. மிக்கியமாக இன்று பேசப்படும் Distruption / Innovation என்று அனைத்துக்கும் ஆதாரமான அறிவையும் கலைத்துவத்தையும் கலைநயத்தையும் சேர்த்து வழங்குவாள் சரஸ்வதி. ஆனால் எமக்கு நல்ல Project Idea மட்டும் இருந்தால் போதாது. இன்றைய உலகில் இவ்வெண்ணங்களுக்கு அவ்வளவாக மதிப்பில்லை. ஆனால் வலிமையும் வளமும் இருக்குமானால் இந்த எண்ணங்களுக்கு வலுச்சேர்த்து சிறந்த வியாபாரத்தினை உருவாக்க வழிவகுக்கும்.
இறுதியாக அது என்ன விஜயதசமி?
அன்றுதான் வலிமைபொருந்திய வளமுள்ள அணி ஒரு சிறந்த எண்ணக்கருவை Product ஆக மாற்ற ஆரம்பிக்கும் நாள். அன்று புதியவற்றைத் தொடங்கும் நாள், அவற்றுக்குத் தேவையான சக்திகளை வேண்டி வழிபட்டு புதியவற்றைத் தொடங்குவர்.
இதுதான் ஸ்ராட்டப்புக்கும் சரஸ்வதி பூசைக்குமான தொடர்பு! :)
அனைவருக்கும் ஆரம்பிக்கும் அனைத்தும் கைகூடட்டும்!!!
இவற்றுக்கென்ன சம்பந்தம்?
சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும்
அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும்.
சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே?
துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர். பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம்.
எமக்கு வலிமை மட்டும் இருந்தால் போததாது, வளங்களை அள்ளித் தருவது இரண்டாதாக நாம் வழிபடும் லச்சுமி. முக்கியமாக ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்ற அஷ்ட லச்சுமிகளும் பணம் மேலும் தைரியம் வெற்றிச் செல்வம் அறிவுச் செல்வம் என்று நமக்கு மிக முக்கியமாக ஸ்ராட்டப் செய்யத் தேவைப்படும் அனைந்து வளங்களையும் வழங்குகிறாள் லச்சுமி.
நிறைவாக சரஸ்வதி தேவி. எமக்கு வலிமை, வளம் இருந்தாலும் புத்தம் புதிய யோசனைகள் எண்ணங்கள் எண்ணங்களைச் செயற்படுத்துவதற்கான அறிவு என்று ஸ்ராட்டப்புக்குத் தேவையான மூன்றாவது முக்கியமான தேவைகளை நிறைவு செய்வாள் சரஸ்வதி. மிக்கியமாக இன்று பேசப்படும் Distruption / Innovation என்று அனைத்துக்கும் ஆதாரமான அறிவையும் கலைத்துவத்தையும் கலைநயத்தையும் சேர்த்து வழங்குவாள் சரஸ்வதி. ஆனால் எமக்கு நல்ல Project Idea மட்டும் இருந்தால் போதாது. இன்றைய உலகில் இவ்வெண்ணங்களுக்கு அவ்வளவாக மதிப்பில்லை. ஆனால் வலிமையும் வளமும் இருக்குமானால் இந்த எண்ணங்களுக்கு வலுச்சேர்த்து சிறந்த வியாபாரத்தினை உருவாக்க வழிவகுக்கும்.
இறுதியாக அது என்ன விஜயதசமி?
அன்றுதான் வலிமைபொருந்திய வளமுள்ள அணி ஒரு சிறந்த எண்ணக்கருவை Product ஆக மாற்ற ஆரம்பிக்கும் நாள். அன்று புதியவற்றைத் தொடங்கும் நாள், அவற்றுக்குத் தேவையான சக்திகளை வேண்டி வழிபட்டு புதியவற்றைத் தொடங்குவர்.
இதுதான் ஸ்ராட்டப்புக்கும் சரஸ்வதி பூசைக்குமான தொடர்பு! :)
அனைவருக்கும் ஆரம்பிக்கும் அனைத்தும் கைகூடட்டும்!!!
Comments