Skip to main content

விவாகரத்துக் கலாசாரம்

சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன.

நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை.

நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறோம். இலங்கையில் இன்று கிராமத்தைத் தேடவேண்டிய நிலைமையில், இந்த விவாகரத்துக் கலாசாரமும் அவர்களை அடைந்துவிடுமா என்பது சற்றி யோசிக்கவைக்கிறது.

நாம் இதற்கான காரணத்தை உலகமயமாக்கல் மீதும் ஊடகங்கள் மீதும் தூக்கிப்போட்டுவிட்டு இருந்துவிடமுடியாது. நான் சொல்வேன், இன்று நாம் நடந்துவந்த பாதைகளைத் திரும்பிப்பார்க்கதே முதற்காரணம். அவ்வாறு நாம் செய்வோமாயின், நாம் வந்த பாதை, கடந்து வந்தவை, அதன் பெறுமதி.... இப்படியாக எல்லாம் எமக்குள் இருக்கும்...

இனி என்ன செய்ய... பார்ப்போம்..,. அடுத்து நாங்கள் எந்த பக்கத்தை நோக்கிப்போகப்போகிறோம் என்று :-(


Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

அலட்டல் 1 - ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்

ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்  இவற்றுக்கென்ன சம்பந்தம்? சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும் அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும். சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே? துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர்.  பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம். எமக்க...

தசாவதாரம் - ஒரு வித்தியாசமான பார்வை

தசாவதாரம் பற்றி நானும் எழுத முனைந்தேன்...அதனை முழுமையாக, முக்கியமாக விஞ்ஞானநோக்கில் பார்க்கமுனைந்துள்ளேன். அது இம்மாத ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. http://docs.google.com/View?docid=dpxnhgb_1g8v9qz73