Skip to main content

Posts

இலங்கைப் பதிவர் சந்திப்பு - 2009

கடந்த ஞாயிற்றுக்கிழமை - 23.08.2009 முதல் ((என்று சொல்லப்படுகிறது)) இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தேன். நிகழ்வு இனிதே நிகழ்ந்தது... சிறப்பாக எழுதக்கூடியவர்கள், சிறந்த பேச்சாளர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது உண்மைதானோ? அதனால் எக்குறையுமில்லை, கலந்துரையாடல் இன்னும்கொஞ்சம் உத்தியோகபூர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தனைபேர் கலந்துகொள்வர் என அக்கூட்டத்திற்கு வந்த பலரைப்போல நானும் எதிர்பார்க்கவில்லை. பலர் பலவற்றைப் பேசினர், நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைச்சொல்லி விவாதத்தைத் தூண்டிவிட்டேன். அந்த விவாதம் சற்றுச் சூடுபிடித்துவிட்டது, அதனை இன்னும் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அந்நிகழ்வின் நோக்கம் அதில்லையென்பதால் பேசாமல் அமர்ந்துவிட்டேன். இது முதலாவது முயற்சி என்ற ரீதியில் பார்க்குமிடத்து நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சிலரைப் பற்றி மிகவும் பம்பல் அடிக்கப்பட்டிருந்தது, அதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். நபர்களை அறிமுகஞ்செய்யும் விதத்திலும் சில இடங்களில் சற்று அதிகமாகப் போய்விட்டது என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒழுங்கமைப்பாளா்கள் பணச்சுமையைச் சுமக்கக்கூடாது, ஆனால் அத...

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்... ம்.. இன்று எல்லோரும் முணுமுணுக்கும் பெயர். ரஹ்மானின் இரசிகன் நான்... றோஜாவிலிருந்தே இரசிகன்... ஒஸ்கார் கிடைத்தது பெரிய விசயம்தான்... ஆனால், ஒஸ்காரால் அவருக்குப் பெருமையல்ல... ரஹ்மானிடம் எனக்குப் பிடித்தது... இசையைத் தவிர... அவரது பணிவு... பெருந்தன்மை... மனிதாபிமானம்.. சுனாமி அடித்தபோது... தமிழகத்தின் ஒரு கிராமத்தின் கடற்கரையில் ரஹ்மான், சிவமணி, ஹரிகரன் எனத் தன் குழுவினருடன் போய் ஒரு இசைக் கச்சேரி செய்தாராம்... சுமார் இரண்டரை மணிநேரம் செய்தாராம்... இதைவிட மனிதாபிமானத்திற்கு அத்தாட்சி என்ன வேண்டும்... அவர் நடத்திய கச்சேரிகளை விரல்விட்டு எண்ணலாம்... சென்னையில் ஒரேயொரு முறைதான் நடத்தியிருக்கிறார்... வாழ்க ரஹ்மான்...

மீண்டும்

எனக்கும் நிறைய எழுதவேண்டும் என்று ஆசைதான்... காலம் கைகொடுக்கவில்லை என்பதைவிட நான் காலத்திற்குக் கைகொடுக்கவில்லை என்பதே சரி. காலத்திற்கு கைகொடுத்து அதனை அனுசரிக்கவில்லை... சரி போகட்டும்... இனி.. இன்றிலிருந்து ஏதாவது ஏழுதவேண்டும்.. மீண்டும் ஒரு மூர்க்கத்தனமான முடிவு. பார்ப்போம்..

கன காலத்துக்குப் பிறகு...

கனகாலத்துக்குப் பிறகு இண்டைக்கு இதைத் திரும்ப எழுதத்தொடங்கவேண்டும் எண்டு நினைச்சன். இத மாதிரி எத்தனையோ வேலைகளைச் செய்யத்தொடங்கி அமையெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. என்ன செய்யயிறனெண்டு தெரிமாகக் கிடக்கு. சில நேரம், இதெல்லாம் செய்து என்ன நடக்கப்போகிது எண்டு நினைப்பன். சிலவேளை ஐயோ செய்யவேண்டும் என்று நினைத்து இப்படி ஒரு போஸ்டைப் போடுவன். பாப்பம் இனி என்ன நடக்கப்போகுதெண்டு...

தசாவதாரம் - ஒரு வித்தியாசமான பார்வை

தசாவதாரம் பற்றி நானும் எழுத முனைந்தேன்...அதனை முழுமையாக, முக்கியமாக விஞ்ஞானநோக்கில் பார்க்கமுனைந்துள்ளேன். அது இம்மாத ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. http://docs.google.com/View?docid=dpxnhgb_1g8v9qz73

விவாகரத்துக் கலாசாரம்

சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன. நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த ...

வானொலித் தகவல் - 2008.07.04

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Firefox 3.0 இன்று பார்த்தோமானால் பயர்பொக்ஸ் 3 சம்பந்தமாக பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், பயர்பொக்ஸ் 3 என்பது Mozilla அறக்கட்டளையால் வெளியிடப்படும் ஒரு இலவச திறந்த மூல இணைய உலாவியாகும். இந்த பயர்பொக்ஸ் 3.0 இன் இறுதிப் பதிப்பு கடந்த 17ம் திகதி 46 மொழிகளில் வெளியிடப்பட்டது. அது வெளியிடப்பட்டு 24ம் மணித்தியாலங்களுக்குள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் அதனைப் பதிவிறக்கியுள்ளார்கள். இந்த எண்ணிக்கையே இதுவரை வெளிவந்த மென்பொருள்களில் ஒருநாளில் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கப்பட்ட மென்பொருளாகும். இது திறந்த மூல மென்பொருள் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளதுடன், பெரும் வெற்றியாகவும் கருதப்படுகிறது. இனி பயர்பொக்ஸ் 3 இல் உள்ள சிறப்பம்சங்கள் எவையெனப் பார்ப்போம். உங்களில் பலர் பயர்பொக்ஸ் 2ம் பதிப்பைப் பயன்படுத்திவரலாம், அதன் மூலம் சிலவேளை விரக்தியடைந்தும் இருக்கலாம். ...