Skip to main content

வானொலித் தகவல் - 2008.06.27

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.

கணினியின் திறனை அதிகரித்தல்.

நிச்சயமாக உங்களுக்குத்தெரியும், வன்பொருள்களின் அளவை அவற்றின் கொள்ளவுகளை அதிகரிப்பதன் மூலம் கணினியின் திறனை அதிகரிக்கலாம் என்பது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போன்ற விடயம் என்னவெனில், எப்படி அவ்வாறு புதிய வன்பொருள்ளோ அல்லது பணச்செலவோ இல்லாது, ஒரு கணினியின் திறனை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கலாம் என்று.
கணினியின் திறனை எடுத்துக்கொண்டால், அது கணினியின்
1. தற்காலிக நினைவகமான RAM
2. CPU
3. Harddisk இல் உள்ள வெற்றிடம் மற்றும் அதில் உள்ள கோப்புகளின் ஒழுங்கமைப்பு.
1. முதலாவதாக வன்தட்டின் திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்ப்போம். சிறிதுகாலம் செல்ல வன்தட்டிலுள்ள கோப்புகள் / தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்காணப்படலாம். எனவே அவை அவசியப்படும் நேரத்தில் அவை சிதறிக்கிடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று அவற்றை வாசிக்கவேண்டிய தேவை கணினிக்கு இருக்கிறது. இது குறித்த கணினியின் திறனை குறைக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், குறித்த வன்தட்டை defragmentation செய்யவேண்டும். குறைந்த்து மாத்த்திற்கொருமுறை செய்வது நல்லது.
2. அடுத்தாக வன்தட்டில் போதிய வெற்றிடத்தைப் பேணுதல் : கணினி இயங்கும்போது அது தற்காலிகமாகப் பல கோப்புகளை உருவாக்கும். பின்னர் சிலவேளை அவற்றை நீக்காது. அத்தோடு நாம் இணையத்திற்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் நாம் செல்லும் இணையத்தளங்கள் மற்றும் அது சம்பந்தமான விடயங்களும் கணினியில் எம்மை அறியாமல் பதியப்படும். எனவே இவ்வாறான அனாவசியமான கோப்புகளை நீக்கி நீங்கள் உங்கள் வன்தட்டிலுள்ள இடத்தினை அதிகரித்துக்கொள்ளலாம்.

CPU மற்றும் RAM திறனை அதிகரிப்பதென்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அதாவது, கொஞ்சம் ஆழ்ந்த கணினி அறிவு அவசியம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதென்னவெனில், உங்கள் கணினியில் உள்ள அனாவசியமாக செயற்படுத் சேவைகளை நிறுத்தவேண்டும். அனாவசியமான மென்பொருகள் கணினி ஆரம்பிக்கும்போது சேர்ந்து ஆரம்பிக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் கணினியில் வைரஸ் இல்லாமல், அத்தொற்று வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

அலட்டல் 1 - ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்

ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்  இவற்றுக்கென்ன சம்பந்தம்? சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும் அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும். சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே? துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர்.  பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம். எமக்க...

தசாவதாரம் - ஒரு வித்தியாசமான பார்வை

தசாவதாரம் பற்றி நானும் எழுத முனைந்தேன்...அதனை முழுமையாக, முக்கியமாக விஞ்ஞானநோக்கில் பார்க்கமுனைந்துள்ளேன். அது இம்மாத ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. http://docs.google.com/View?docid=dpxnhgb_1g8v9qz73