நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.
கணினியின் திறனை அதிகரித்தல்.
நிச்சயமாக உங்களுக்குத்தெரியும், வன்பொருள்களின் அளவை அவற்றின் கொள்ளவுகளை அதிகரிப்பதன் மூலம் கணினியின் திறனை அதிகரிக்கலாம் என்பது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போன்ற விடயம் என்னவெனில், எப்படி அவ்வாறு புதிய வன்பொருள்ளோ அல்லது பணச்செலவோ இல்லாது, ஒரு கணினியின் திறனை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கலாம் என்று.
கணினியின் திறனை எடுத்துக்கொண்டால், அது கணினியின்
1. தற்காலிக நினைவகமான RAM
2. CPU
3. Harddisk இல் உள்ள வெற்றிடம் மற்றும் அதில் உள்ள கோப்புகளின் ஒழுங்கமைப்பு.
1. முதலாவதாக வன்தட்டின் திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்ப்போம். சிறிதுகாலம் செல்ல வன்தட்டிலுள்ள கோப்புகள் / தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்காணப்படலாம். எனவே அவை அவசியப்படும் நேரத்தில் அவை சிதறிக்கிடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று அவற்றை வாசிக்கவேண்டிய தேவை கணினிக்கு இருக்கிறது. இது குறித்த கணினியின் திறனை குறைக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், குறித்த வன்தட்டை defragmentation செய்யவேண்டும். குறைந்த்து மாத்த்திற்கொருமுறை செய்வது நல்லது.
2. அடுத்தாக வன்தட்டில் போதிய வெற்றிடத்தைப் பேணுதல் : கணினி இயங்கும்போது அது தற்காலிகமாகப் பல கோப்புகளை உருவாக்கும். பின்னர் சிலவேளை அவற்றை நீக்காது. அத்தோடு நாம் இணையத்திற்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் நாம் செல்லும் இணையத்தளங்கள் மற்றும் அது சம்பந்தமான விடயங்களும் கணினியில் எம்மை அறியாமல் பதியப்படும். எனவே இவ்வாறான அனாவசியமான கோப்புகளை நீக்கி நீங்கள் உங்கள் வன்தட்டிலுள்ள இடத்தினை அதிகரித்துக்கொள்ளலாம்.
CPU மற்றும் RAM திறனை அதிகரிப்பதென்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அதாவது, கொஞ்சம் ஆழ்ந்த கணினி அறிவு அவசியம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதென்னவெனில், உங்கள் கணினியில் உள்ள அனாவசியமாக செயற்படுத் சேவைகளை நிறுத்தவேண்டும். அனாவசியமான மென்பொருகள் கணினி ஆரம்பிக்கும்போது சேர்ந்து ஆரம்பிக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் கணினியில் வைரஸ் இல்லாமல், அத்தொற்று வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கணினியின் திறனை அதிகரித்தல்.
நிச்சயமாக உங்களுக்குத்தெரியும், வன்பொருள்களின் அளவை அவற்றின் கொள்ளவுகளை அதிகரிப்பதன் மூலம் கணினியின் திறனை அதிகரிக்கலாம் என்பது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போன்ற விடயம் என்னவெனில், எப்படி அவ்வாறு புதிய வன்பொருள்ளோ அல்லது பணச்செலவோ இல்லாது, ஒரு கணினியின் திறனை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கலாம் என்று.
கணினியின் திறனை எடுத்துக்கொண்டால், அது கணினியின்
1. தற்காலிக நினைவகமான RAM
2. CPU
3. Harddisk இல் உள்ள வெற்றிடம் மற்றும் அதில் உள்ள கோப்புகளின் ஒழுங்கமைப்பு.
1. முதலாவதாக வன்தட்டின் திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்ப்போம். சிறிதுகாலம் செல்ல வன்தட்டிலுள்ள கோப்புகள் / தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்காணப்படலாம். எனவே அவை அவசியப்படும் நேரத்தில் அவை சிதறிக்கிடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று அவற்றை வாசிக்கவேண்டிய தேவை கணினிக்கு இருக்கிறது. இது குறித்த கணினியின் திறனை குறைக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், குறித்த வன்தட்டை defragmentation செய்யவேண்டும். குறைந்த்து மாத்த்திற்கொருமுறை செய்வது நல்லது.
2. அடுத்தாக வன்தட்டில் போதிய வெற்றிடத்தைப் பேணுதல் : கணினி இயங்கும்போது அது தற்காலிகமாகப் பல கோப்புகளை உருவாக்கும். பின்னர் சிலவேளை அவற்றை நீக்காது. அத்தோடு நாம் இணையத்திற்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் நாம் செல்லும் இணையத்தளங்கள் மற்றும் அது சம்பந்தமான விடயங்களும் கணினியில் எம்மை அறியாமல் பதியப்படும். எனவே இவ்வாறான அனாவசியமான கோப்புகளை நீக்கி நீங்கள் உங்கள் வன்தட்டிலுள்ள இடத்தினை அதிகரித்துக்கொள்ளலாம்.
CPU மற்றும் RAM திறனை அதிகரிப்பதென்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அதாவது, கொஞ்சம் ஆழ்ந்த கணினி அறிவு அவசியம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதென்னவெனில், உங்கள் கணினியில் உள்ள அனாவசியமாக செயற்படுத் சேவைகளை நிறுத்தவேண்டும். அனாவசியமான மென்பொருகள் கணினி ஆரம்பிக்கும்போது சேர்ந்து ஆரம்பிக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் கணினியில் வைரஸ் இல்லாமல், அத்தொற்று வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
Comments